மாயாவதி தோல்வியும் தலித் அரசியலும்:ஒரு ஆய்வு

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வி ஒரு புறமிருக்க, அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்வி, தலித் அரசியல் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. 2007ம் ஆண்டு அம்மாநிலத்தில் மாயாவதி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தபோது, இந்தியாவில் தலித் அரசியலின் வெற்றி வீராங்கனையாக அவர் பார்க்கப்பட்டார். ஆனால் ஐந்தாண்டுகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தும் அவர் தனது சமூக அரசியலின் ஆளுமையை அம்மாநிலத்தில் நிலை நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்பது எதைக்காட்டுகிறது என்று தலித் எழுத்தாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்