உடன்பிறந்த தங்கையை கொன்ற அண்ணன்: தலித் வாலிபரை மணந்ததால் வெறிச்செயல்

 புதன்கிழமை, 14 மார்ச் 2012, 12:19.12 PM GMT +05:30 ]
தலித் வாலிபரை மணந்ததால் உடன்பிறந்த தங்கையை கழுத்தை நெறித்து கொலை செய்த கொலைகார அண்ணனை பொலிஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஸ்ருதி, அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றினார்.
அவர் தலித் இனத்தை சேர்ந்த ஆசிரியர் சுதீப்குமாரை காதலித்தார். இதற்கு அவரது அண்ணன் மகாதேவா எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையும் மீறி ஸ்ருதி, சுதீப்குமாரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
தனது எதிர்ப்பை மீறி ஸ்ருதி 'தலித்' ஆசிரியரை மணந்ததால் கோபம் கொண்ட மகாதேவா, அவர் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், தங்கை என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இதுபற்றி மைசூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.