EDUCATIONAL WORKSHOP FOR ARUNTHATHIYAR COLLEGE GOING STUDENTS

EDUCATIONAL WORKSHOP FOR ARUNTHATHIYAR COLLEGE  GOING STUDENTS

PROGRAMME SCHEDULE:

  1. Leadership and Personality Development Classes
  2. English Language Communication Skills Learning
  3. Guidance for Higher Education both in Science and Humanities 
  4. Guidance for Judicial and Administrative Services Examinations
  5. Journalism (Both in Tamil and English)
  6. Classes on Photography and Documentary Film Making
  7. Classes on Human Rights
  8. Group Discussion                                                       
Date: December 24 and 25
Place:KASA HALL,DARAPURAM(TIRUPPUR DIST)

(We welcome your Suggestions ,assistance and participation. we are not NGO. It is a student platform and founded by students themselves)

FOR DETAILS: 9894525254

BY
RAU SAHIB L.C.GURUSAMY EDUCATION CENTRE,
TAMIL NADU
(Inform this to all Students)

நாம்தேவ் லக்ஷ்மண் டசால் : ஒடுக்கப் பட்டவர்களின் மொழி


நாம்தேவ் லக்ஷ்மண் டசால்
"சமூகப் போராட்டங்களின் இலக்கு துயரத்திலிருந்து விடுவிப்பது என்றால்,  அதற்குத் தேவையானது கவிதை; ஏனெனில் அதுவே மகிழ்ச்சியை வலுவாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது" என்று கூறிய நாம்தேவ் லக்ஷ்மண் டசால் (Namdeo Laxman Dhasal) மூத்த மராட்டிக் கவிஞர்களில் ஒருவர்; தலித் இலக்கிய முன்னோடி; இந்திய தலித் சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவர்; தம் இலக்கியப் பணிகளுக்காக நடுவண் அரசின்  'பத்மஸ்ரீ' விருதும் பெற்றவர்.

1949-இல் மராட்டிய மாநிலம் பூனாவுக்கு அருகில் பூர் கினேர்கர் என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மஹர் சாதியில் பிறந்தவர் நாம்தேவ். இவரது பள்ளிப் பருவம் மும்பையின் கோல்பீட்டா பகுதியில் கழிந்தது. மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி என அறியப்படும் அங்குதான் நாம்தேவின் தந்தை ஒரு இறைச்சிக் கடையில் வேலை பார்த்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக நாம்தேவால் பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியாமல் போனது.

இளம் பருவத்தில் ராம் மனோகர் லோகியாவின் சோஷலிசக் கருத்துகளில் பற்று கொண்டிருந்த நாம்தேவ், பிறகு மார்க்சியத்தால் கவரப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரப் பணியாற்றினார்.  எஸ்.ஏ.டாங்கேவால் அடையாளம் காணப்பட்டவரும், வெகுவாக அறியப்பட்ட கம்யூனிஸ்ட் பாடகருமான ஷாகிர் அமர் ஷேக்கின் மகள் மல்லிகாவை மணந்தார் நாம்தேவ்.

அனைத்து அரசியல் இயக்கங்களும் உயர்சாதி இந்துத் தலைமை மற்றும் பூர்ஷ்வாத் தனத்தால் வரையறுக்கப்பட்ட எல்லைகளையே கொண்டிருப்பதாக உணர்ந்த நாம்தேவ், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக இயங்கிய கருஞ் சிறுத்தைகள் (Black Panthers Party) அமைப்பு ஏற்படுத்திய தாக்கத்துடனும், அம்பேத்கரியப் புரிதலுடனும் அருண் காம்ப்ளே, ராஜா தாலே முதலானவர்களுடன் இணைந்து 1972 -இல் ''தலித் சிறுத்தைகள்'' (Dalit  Panthers of India) என்ற அமைப்பை நிறுவினார். அனைத்து மட்டங்களிலும் உள்ள உயர்சாதித் தனத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான பல துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், போராட்டங்களை வழிநடத்துதல் முதலான தனது தீவிர அரசியல் செயல்பாடுகளால், மகாராஷ்டிரத்தில் மட்டுமின்றி அனைத்திந்திய அளவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது தலித் சிறுத்தைகள் இயக்கம். அவசர நிலைக் காலத்தில் போலீசாரால் தலித் சிறுத்தைகள் அமைப்பின் மீது 300க்கும் மேற்பட்ட போலி வழக்குகள் போடப்பட்டன. பிரதமர் இந்திரா காந்தியை நேரடியாகச் சந்தித்து, அனைத்து வழக்குகளையும் நீக்கச் செய்தார் நாம்தேவ். அவரது பிரியதர்ஷினி என்ற கவிதை நூல் இந்திரா காந்தியைப் பற்றியதே. பிறகு பற்பல கருத்து முரண்கள் மற்றும் தேர்தல் அரசியல் பங்கேற்பு காரணமாக இவ்வியக்கம் பற்பல பிளவுகளைச் சந்தித்தது. தற்போது இந்தியக் குடியரசுக் கட்சியில் இயங்கி வருகிறார் நாம்தேவ் டசால்.

இலக்கியத்தைப் பொறுத்த வகையில், பல தலித் எழுத்தாளர்களைப் போல பாபுராவ் பாகூலின் எழுத்துகளால் தாக்கம் பெற்றவர் நாம்தேவ். இவருக்குப் பெரும் இலக்கிய அந்தஸ்தையும் மக்கள் அபிமானத்தையும் பெற்றுத் தந்த இவரது முதல் கவிதை தொகுதியான கோல்பீட்டா (Golpitha) 1973-இல் இவரது 24 ஆம் வயதில் வெளிவந்தது. 

மராட்டி இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நூல் அது. மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி என அறியப்படும் கோல்பீட்டாவின் தலித் வாழ்வை அதற்கே உரிய மொழியில் தீராக் கோபத்தோடு வெளிப்படுத்தும் கவிதைகளைக் கொண்டது அது. வெளிவந்த அதே ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசின் விருதையும், அடுத்த ஆண்டு சோவியத் லேன்ட் நேரு விருதையும் பெற்றது கோல்பீட்டா.

ஆனந்த் டெல்டும்டே
"அதன் ஒவ்வொரு வார்த்தையும், அதில் பொதிந்திருந்த ஆற்றலும், சீற்றமும், ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த இலக்கிய ஒளிவட்டங்களுக்கு முற்றிலும் அன்னியமானதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருந்தது. உழைக்கும் மக்களின் மொழியில் திருவுருக்களை உடைக்கும் தன்மையிலான படிமங்களாலும், அடங்க மறுக்கும் சொற்களாலும், கடுங்கோபத்தாலும் அதிகாரத்திலிருந்த நிறுவனங்களை வேர் வரை அசைத்தது," என்று கோல்பீட்டாவை மதிப்பிடுகிறார் விமரிசகரும் தீவிர தலித் இயக்கச் செயற்பாட்டாளருமானஆனந்த் டெல்டும்டே.

'கோல்பீட்டா'வைத் தொடர்ந்து துஹி யத்தா கஞ்சீ? (எவ்வளவு படித்தவர் நீங்கள்?), மூர்க் மாதார்யானே (முட்டாள் முதியவன்),மீ மார்லே சூர்யாச்யா ரதாச்சே கோடே சாத் (நான் சூரியனின் ஏழு குதிரைகளைக் கொன்றுவிட்டேன்)  உட்பட ஒன்பது கவிதைத் தொகுதிகளையும், ஹாட்கீ ஹாட்வாலா, நெகட்டிவ் ஸ்பேஸ் ஆகிய நாவல்கலையும் வெளியிட்டுள்ளார் நாம்தேவ் டசால். அந்தாலே ஷதக் (குருட்டு நூற்றாண்டு), அம்பேத்கரி சால்வால் (அம்பேத்கரிய இயக்கம்) ஆகிய இவரது கட்டுரை நூல்களும் குறிப்பிடத் தக்கவை.
1973,1974,1982,1983 ஆகிய ஆண்டுகளில் இலக்கியத்துக்காகமகாராஷ்டிர மாநில அரசின் விருதுகளும், 1974இல் கோல்பீட்டாவூக்காக சோவியத் லேண்ட் நேரு விருதும், 1999ஆம் ஆண்டு உயரிய பத்மஸ்ரீ விருதும், 2004ஆம் ஆண்டுசாகித்ய அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார் நாம்தேவ் டசால்.

நாம்தேவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "Namdeo Dhasal : Poet of the Underworld" என்ற பெயரில் வெளியிட்டவரும், ஆவணப்பட இயக்குநரும், கவிஞருமானதிலீப் சித்ரே (1938-2009) "மராட்டி மொழியில் மட்டுமன்று, இந்தியக் கவிதை நூல்களிலேயே கோல்பீட்டா டி.எஸ். எலியட்டின் 'பாழ்நில'த்திற்கு ஒப்பானது" என்கிறார்.
திலீப் சித்ரே
 "2001 ஆம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்த சர்வதேச இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட நாம்தேவின் கவிதைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. அத்தகையவரின் கவிதைகள் பெங்காளியைத் தவிர்த்து பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படவே இல்லை என்பதைக் கண்டு, அவரது எழுத்தின் வீரியத்தை உணர்ந்தவன் என்ற வகையிலும், மொழிபெயர்ப்பாளன் என்ற வகையிலும் பெரும் மன அழுத்தத்தை உணர்கிறேன்" ஒரு கட்டுரையில் வருந்தியுள்ளார் திலீப் சித்ரே.


-யுவபாரதி 

HIGHER EDUCATION GUIDANCE FOR ARUNTHATHIYAR STUDENTS

CHIEF GUEST : Dr.ELANGOVAN MSc.Phd (NUCLEAR SCIENTIST ,SOUTH KOREA)

OTHER PARTICIPANTSLOHIA CHANDRASEKAR (SUCCESSFUL CANDIDATE IN TNPSC EXAMINATION)
                                           KRISHNAN
(SUCCESSFUL CANDIDATE IN TNPSC EXAMINATION)
                                           K.CHANDRU (BODHI IAS ACADAMY,CHENNAI)
                                           JEYAVEERADEVAN M.A.B.L.Phd

DATE:30-10-2011,SUNDAY
PLACE:KOTHAKIRI(NILGIRI DISTRICT),TAMIL NADU.
FOR DETAILS:917598119427.

தலித் வாலிபரை காதலித்த மகளை கழுத்தை நெறித்து கொன்ற தந்தை


முசாபர்நகர் : உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் தலித் வாலிபரை காதலித்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் அப்துல் சத்தார். இவரது மகள் குலிஸ்தா. இப்பகுதியை சேர்ந்த தலீத் வாலிபர் சோட்டாவை காதலித்து வந்தார். கடந்த வாரம் 22ம்தேதி இருவரும் ஹரித்துவார் சென்றனர். நேற்று முன்தினம் வீடு திரும்பிய குலிஸ்தாவை, அப்துல் சத்தார் கழுத்தை நெரித்து கொன்றார்.
நகராட்சி அலுவலகம் அருகே கிடந்த குலிஸ்தாவை உடலை போலீசார் கைப்பற்றினர். குடும்ப கவுரவத்தை குலைத்ததற்காக மகளை கொன்றதாக அப்துல் சத்தார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அருந்ததிய மூடர்கள்

அருந்ததியர் வாழ்வில் பலவிதமான இன்னல்கள் இழைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் அருந்ததியர்களில் இருக்கும் வேற்று சாதியினறாலே நடக்கிறது. இவர்கள் வேறு எவரும் இல்லை அருந்ததிய தாயிக்கும் வேற்று சாதி தந்தைக்கும் பிறக்கும் இவர்கள் அருந்ததியர்களின் மத்தியில் தஞ்சம் தேடி வருகின்றனர். நம்மை போன்று நம்மில் ஒருவனாக இருக்கட்டும் என நாம் இடம் கொடுத்து அவனை நம் விருந்தினற்போல் கவனிக்கிறோம். இவன் வேற்று சாதியன் என்பதை மறந்து நாம் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நம் விழாக்களில் அவனை விருந்தாளியாக அழைத்து அவனை கௌரவிக்கிறோம். இதை சாதகமாக பயன் படுத்தும் அவன் அவனுக்கு ஆதரவாக சிலரை திரட்டுகிறான். நம் ஊர்த்தலைவர், பெரியமனிதர் போன்ற பதவியை அவனுக்கு இருக்கும் ஆதரவாளர்களை பயன்படுத்தி அவற்றை அவன் அபகரிக்கிறான் இவனுக்கு எதிராக செயல்பட்ட ஆருந்ததியர்களை அருந்ததியர்களை கொண்டே தாக்குகிறான். இவனுக்கு துணைபோகும் இந்த மூட அருந்ததியர்கள் தாம் தாக்குவது தம் உறவை என்பதை கூட அவர்கள் நினைத்துபார்ப்பது இல்லை. இது தமிழ் நாட்டிலே ஒரு எல்லைஓர மாவட்டத்தின் தலைநகரிலே நடந்தது. இன்றும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நான் தினமும் என் கண்களால் கண்டு கொண்டுதான் இருக்கிறேன் 
                                                                                                              -  அருந்ததியன் 

அருந்ததியனின் வெற்றி

தலித் வாலிபருடன் ஓடிப் போன பெண்ணை அடித்துக் கொன்ற கணவர் குடும்பத்தினர்


மொரேனா : மத்தியப் பிரதேச மாநிலத்தில், கள்ளக் காதலனுடன் ஓடிப்போன பெண்ணைப் பிடித்து வந்த அவரது கணவர் குடும்பத்தினர், அடித்துக் கொன்றதோடு, உடலுக்கும் தீ வைத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் லெகர் கிராமத்தில், கடந்த 20ம் தேதி நடந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: மொரேனா மாவட்டம், லெகர் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி என்ற போரி, 30. இவருக்குத் திருமணமாகி, நான்கு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், வீட்டுக்கு அருகே வசிக்கும் கமல் என்ற தலித் வாலிபருடன், கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 2ம் தேதி, அவருடன் குட்டி தலைமறைவானார். ஓடிப் போன குட்டியை, அவரது கணவர் குடும்பத்தினர் தேடி வந்தனர்.
கடந்த 20ம் தேதி கண்டுபிடித்தனர். அவரை ஊருக்கு கொண்டு வந்து, பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொன்றனர். பின்னர், உடலை மரத்தில் தொங்க விட்டு, அதற்கு தீயும் வைத்தனர். சம்பவத்தின் போது, குட்டியைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.
சம்பவம் குறித்து குட்டியின் பெற்றோர், டிம்னி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து, குட்டியின் மரணத்திற்குக் காரணமான, அவரது கணவர் குடும்பத்தினரை, போலீசார் தேடி வருகின்றனர். அத்துடன் கள்ளக் காதலன் கமலின் குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர்.

ரூ.685 கோடி செலவில் பிரமாண்ட தலித் நினைவகத்தை மாயாவதி திறந்து வைத்தார்




Mayawati inaugurated 685-crore Noida memorial park today - India News Headlines in Tamil



நொய்டா(உ.பி.), அக். 15-
உத்தரபிரதேசத்தில் ரூ.685 கோடி செலவில் தலித் நினைவகத்தை திறந்து வைத்த மாயாவதி, காங்கிரஸ் அரசு மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.
உத்தரபிரதேச முதல் மந்திரியாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி பதவி வகித்து வருகிறார்.
டெல்லி புறநகர் பகுதியை ஒட்டியுள்ள நொய்டாவில், தலித் தலைவர்களை கவுரவிக்கும் வகையில், பூங்காவுடன் கூடிய பிரமாண்டமான தலித் நினைவகத்தை அவர் உருவாக்கி வந்தார். 80 ஏக்கர் பரப்பளவுக்கும் அதிகமான இடத்தில் தலித் தலைவர்களான டாக்டர் அம்பேத்கார், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராம் ஆகியோருடைய நினைவிடங்களுடன் மாயாவதியின் உருவச்சிலையும் அந்த நினைவகத்தில் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் மாயாவதி கட்சியின் சின்னத்தை குறிக்கும் வகையில், தலா ரூ.70 லட்சம் செலவில் 20 யானைகளின் சிலைகளும் அங்கு நிறுவப்பட்டு உள்ளன. பல்வேறு எதிர்ப்புகள், சர்ச்சைகள் மற்றும் கோர்ட்டு வழக்குகளை கடந்த அந்த நினைவகம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. ஏறத்தாழ ரூ.685 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நினைவகத்தை, முதல்-மந்திரி மாயாவதி திறந்து வைத்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தலித் தலைவர்களை புறக்கணித்து வருவதாக கடும் தாக்குதல் தொடுத்தார். அவர் கூறியதாவது:
"டெல்லியில் யமுனா நதியின் மேற்கு கரையில் காந்தி-நேரு குடும்பத்தினருக்கு ஏராளமான நினைவகங்களை எழுப்பியுள்ள மத்திய காங்கிரஸ் அரசு எழுப்பியுள்ளது. எனவே எங்களைப் பற்றி விமர்சிக்க காங்கிரசுக்கு உரிமை இல்லை.
ஆனால், தலித் தலைவர்களான அம்பேத்கார் மற்றும் கன்சிராம் போன்றவர்களுக்கு எந்த நினைவு சின்னங்களும் அமைக்கப்படவில்லை. இதன்மூலம் தலித் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புண்படுத்திவிட்டது. எனது தலைமையிலான அரசுதான் தலித் தலைவர்களுக்கு நினைவகம் எழுப்பி உரிய மரியாதை செய்து உள்ளது.
மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது என் மீது பொய் வழக்குகள் தொடரப்பட்டு தொல்லை கொடுத்து வந்தனர். அப்போது என்னுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் எனக்கு நியாயம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
ஆனால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பிறகும் எனக்கு நியாயம் வழங்குவதற்குப் பதிலாக மீண்டும் சி.பி.ஐ. மூலம் எனக்கு தொல்லைதான் கொடுத்து வருகிறார்கள். நான் ஒரு தலித்தின் மகள் என்பதே இதற்கு காரணம். மேலும் உத்தர பிரதேசத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது.
உத்தர பிரதேசத்தில் தலித் ஓட்டுகளை பிரிப்பதற்காக காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த பாபு ஜெகஜீவன்ராமை பிரதமர் ஆக்க காங்கிரஸ் தவறிவிட்டது. அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் எனது செல்வாக்கை கண்டு பயந்து, தலித் மக்களின் ஓட்டை பிரிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங்கை நீக்கிவிட்டு, தலித் சமுதாயத்தை சேர்ந்த பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் மீராகுமார் அல்லது மத்திய மந்திரியான சுஷில்குமார் ஷிண்டே ஆகிய இருவரில் ஒருவரை பிரதமராக நியமிக்க காங்கிரஸ் முயற்சிக்கலாம் என்று கருதுகிறேன்". இவ்வாறு மாயாவதி கூறினார்.

உத்தபுரம் தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு! இருதரப்பு ஒப்பந்தத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு!


மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் தலித் மக்களின் நீண்ட காலக்கோரிக்கைகள் குறித்து சுமுகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 20-10-11 அன்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலித் மக்களுக்கும் இதர சமூகத்தினருக்கும் இடையே இத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வாழ்த்தி வரவேற்கிறது.
 
இந்த உடன்பாட்டின்படி தலித் மக்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அரசமர வழிபாடு உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. முத்தாலம்மன் கோவில் வழிபாட்டு உரிமையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுளளது. 2008-ஆம் ஆண்டு தீண்டாமைச்சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக்களின் பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட பொதுப்பாதையை பல ஆக்கிரமிப்புகள் மற்றும் இடையூறுகள் காரணமாக அவர்களால் சுதந்திரமாகவும், முழுமையாகவும் பயன்படுத்த முடியாமல் இருந்தது. தற்போது அப்பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தலித் மக்கள் சுதந்திரமாகவும், தடையின்றியும் பயன்படுத்திட ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பல சம்பவங்களில் இருதரப்பினர் மீதும் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படவும் ஒப்பந்தம் வகை செய்கிறது. உத்தபுர அனைத்துப்பகுதி மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கான நிழற்குடை அமைக்கவும் வழி காணப்பட்டுள்ளது. இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழவும், அமைதியையும், சட்டத்தின் ஆடசியையும், நிலைநாட்ட ஒத்துழைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இரு சமூகத்தினரும் மனப்பூர்வமாக ஏற்று அமல்படுத்திட ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 
இந்த ஒப்பந்தம் உத்தபுரம் தலித் மக்கள் நீடித்து நடத்திய ஒன்றுபட்ட இயக்கங்களுக்கும், மேற்கொண்ட முயற்சிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இக்காலத்தில் ஏராளமான தலையீடுகளையும், இயக்கங்களையும் உத்தபுரம் தலித் மக்களுக்காக நடத்தியுள்ளன. சிபிஎம் அகில இந்திய  பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் 2007-ல் உத்தபுரம் கிராமத்திற்கு வருகை தந்தது மிக முக்கியமான நிகழ்வாக அமைந்திருந்தது.  உத்தபுரம் பகுதியில் சமூக நீதியையும், அதன் அடிப்படையிலான சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட உதவும் இத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட இரு சமூகத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுகிறது.  காலதாமதமாகியுள்ள போதிலும், இந்த ஒப்பந்தத்தை உருவாக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேற்கொண்ட முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பெரிதும் வரவேற்கிறது.
 
இரு சமூகத்தினரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்திட தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காலதாமதமின்றி உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், அதன் மூலமே தற்போது உருவாகியுள்ள இயல்பான சூழலை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் முடியும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
அவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பேராதரவு தருமாறு அனைத்துத் தரப்பு மக்களையும், ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
(ஜி. ராமகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்

உத்தபுரத்தில் தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் சில முக்கியமான அம்சங்கள்.

* முத்தாலம்மன் கோயிலுக்குள் தலித்துகள் நுழைய அனுமதி

* 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்த அரசமர வழிபாடு அனுமதி

* தலித் மக்கள் முழு உரிமையுடன் பொதுப்பாதையைப் பயன்படுத்தலாம்.

* தலித் மக்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்

* இரு சாதியும் அமர்வதற்கான பொதுவான நிழற்குடை.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த கலெக்டர் சகாயம், எஸ்.பி. அஸ்ரா கார்க் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து அமைப்புகளையும் வாழ்த்துவோம்

மன்மோகன் சிங்குக்கு பதிலாக தலித் பிரதமரை நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை





லக்னோ: ‘‘மன்மோகன் சிங்குக்கு பதிலாக தலித் இனத்தை சேர்ந்தவரை பிரதமராக்கும் திட்டம் எதுவுமில்லை’’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறினார்.
இது தொடர்பாக லக்னோவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஊழலை ஒழிப்பதில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், உத்தர பிரதேசத்தில் மாயாவதி அரசில் நடக்கும் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அவர் அப்படி செய்தால், காங்கிரசும் அதில் பங்கேற்கும். உண்ணாவிரதத்தில் நான் கூட கலந்து கொள்வேன். பலமான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரை காத்திருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த மசோதாவில் சேர்க்கும்படி அன்னா குழு தெரிவித்த 3 முக்கிய அம்சங்களை மத்திய அரசு ஏற்றுள்ளது. எனவே, நாடாளுமன்றத்துக்கு மதிப்பளித்து, அதன் முடிவுக்காக அன்னா பொறுத்திருக்க வேண்டும்.
மன்மோகன் சிங்குக்கு பதிலாக தலித் இனத்தை சேர்ந்தவரை பிரதமராக்கும் திட்டம் எதுவும் இல்லை. தனது ஊழல் ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பவே, தலித் பிரதமர் நியமிக்கப்படுவதாக முதல்வர் மாயாவதி தவறான தகவலை பரப்பி வருகிறார். 
இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி தலித் அமைப்பு ஆர்ப்பாட்டம்..!!



பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா வளாகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதாவுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பெங்களூர் நகர காவல் ஆணையரின் பிரமாணப் பத்திரத்தை கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் அனிதா தேசாய் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
இதனடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று பெங்களூர் பரப்பன்ன அக்ரஹாரா சிறை வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.
இந் நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த சமதா சைனிக் தளம் என்ற தலித் அமைப்பு கருப்புக் கொடியுடன் சிறைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது…..
“பரமக்குடியில் தலித் வகுப்பினர் மீது தமிழக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர். தலித்கள் மீது நடத்தப்பட்ட இந்த அராஜக தாக்குதலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தியவர்களைப் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக தலித் அமைப்பு ஆர்ப்பாட்டம்

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடகத்தைச் சேர்ந்த தலித் அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது பரமக்குடியில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஜெயலலிதா ஆஜரான பெங்களூர் பரப்பன்ன அக்ரஹார சிறைக்கு வெளியே சமதா சைனிக் தளம் என்ற தலித் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலித்துகள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அரசு இயந்திரத்தின் வன்முறை


சாதியாதிக்கத்திற்கு எதிராகப் போராடியதால் 1957இல் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரனின் நினைவிடம் அமைந்துள்ள பரமக்குடியில் அவரது நினைவு நாளான கடந்த செப்டம்பர் 11ஆம் நாள் ஏராளமான தலித் மக்கள் அஞ்சலி செலுத்தத் திரளவிருந்த நிலையில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வரை இறந்துள்ளனர். இறந்தோர், காயமடைந்தோர் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்ல முடியாத அளவிற்கு இத்தாக்குதல் கடுமையானதாக இருந்திருக்கிறது. அத்துடன் துப்பாக்கிச் சூடு நடந்த காலை 11 மணிக்குப் பின்னரும் மாலை
5 மணி வரை காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
சாதுரியமாகக் கையாண்டிருக்கக்கூடிய பிரச்சினையைத் தவறாகக் கையாண்ட காவல் துறையினரால்தான் இந்த வன்முறை நடந்திருப்பதாக இப்பிரச்சினை குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இமானுவேல் குருபூஜை என்னும் பெயரில் முன்னெடுக்கப்படும் அஞ்சலி நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த ஜான்பாண்டியன் கைதுசெய்யப்பட்டதை அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்யக் கோரிச் சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இம்மறியலால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல் துறை தெரிவிக்கிறது. அதாவது மறியலில் ஈடுபட்டோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததோடு காவல் துறையினரையும் தாக்கி வாகனங்களைக் கொளுத்தினர் என்றும் காவல் துறையினர் விளக்கம் கொடுத்துள்ளனர். காவல் துறையின் இதே கருத்தைத்தான் பெரும்பாலான ஊடகங்களும் அரசும் பிரதிபலித்துள்ளன. ஆனால் இந்நிகழ்வு குறித்த வீடியோ பதிவு உள்ளிட்ட ஆதாரங்களைப் பார்க்கும்போது இக்கூற்றுகள் திரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது. அங்கு 20 பேர் அளவில்தான் மறியலில் ஈடுபட்டிருந்தனர். அக்கூட்டம் சாலையை முழுமையாக ஆக்கிரமிக்கக்கூடியதாக இல்லை. சிறிய அளவிலான இம்மறியல் நடந்துகொண்டிருக்கும்போதே அஞ்சலி செலுத்துவதற்காக வாகனங்கள் சென்று வரக்கூடிய நிலைமைதான் அங்கு இருந்துள்ளது. இந்நிகழ்விற்காகப் போக்குவரத்து நகரச்சாலையிலிருந்து முற்றிலுமாக மாற்றுப்பாதைக்குத் திருப்பிவிடப்பட்டிருந்ததால் போக்குவரத்து இடையூறு என்று கூறுவதில் எந்தத் தர்க்கமும் இல்லை. எனவே ஜான்பாண்டியனைத் தக்க பாதுகாப்போடு அழைத்துவந்திருக்கவோ மறியல் செய்தோரை எளிய நடவடிக்கைகள் மூலம் கலைத்திருக்கவோ வாய்ப்பிருந்தது. கடந்த சில ஆண்டுகளில் லட்சம் பேர் கூடும் தமிழக அளவிலான நிகழ்வாக மாறிவரும் இமானுவேல் நினைவுநாள் என்ற உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சியை அதிக எச்சரிக்கையுடன் காவல் துறை கையாண்டிருக்க வேண்டும். தினசரி வாழ்வில் ஒடுக்குமுறையை எதிர்கொண்டுவரும் வகுப்பினர் இதுபோன்ற அரசின் வன்முறைக்கும் ஆளாவது துரதிருஷ்டம்.
துப்பாக்கிச் சூட்டிற்கு முன் கையாளப்பட்டிருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடைமுறைகள் எவையும் இங்கே பின்பற்றப்படவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கூட்டம் கலைந்தோடிய பின்னும் அகப்பட்டவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்கியுள்ளது காவல் துறை.
இறந்த ஆறு பேரில் அடித்துக்கொல்லப்பட்டோரும் உண்டு. குண்டுகள் பெரும்பாலும் இடுப்புக்கு மேலேதான் பாய்ந்துள்ளன. இந்நிலையில்தான் சட்டப்பேரவையில் அறிக்கை வாசித்த முதல்வர் இந்த வன்முறையோடு அதுவரையிலும் நேரடியாக இணைக்கப்படாதிருந்த ‘சாதி மோதல்’ என்ற காரணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். செப்டம்பர் 11க்கு முன்பு செப்டம்பர் 9ஆம் நாள் கமுதி அருகே உள்ள பச்சேரியில் முத்துராமலிங்கத் தேவரை இழிவுபடுத்தி எழுதியதால் 11ஆம் வகுப்பு படிக்கும் பழனிக்குமார் என்னும் தலித் மாணவன் கொல்லப்பட்டதாகவும் இதனால் அங்கே செல்லவிருந்த ஜான் பாண்டியன் கைதுசெய்யப்பட்டதாகவும் அவரை விடுவிக்கக் கோரி மறியலில் ஈடுபட்டோர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் முதல்வரின் அறிக்கை கூறியிருக்கிறது. பிரச்சினையை இரண்டு சாதிகளுக்கு இடையேயானதாக மாற்றிவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கும் அவ்வறிக்கை பிரச்சினையின் வேரைத் தலித்துகள் தரப்பில் தேடுவதாகவும் அமைந்திருக்கிறது. முதல்வரின் இந்த அறிக்கை துரதிருஷ்டவசமானது. சாதி காரணமாகக் கொல்லப்பட்ட பழனிக்குமாரின் படுகொலைக்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை அக்கொலையைத் தேவரை இழிவுபடுத்தியதால் ஏற்பட்ட எதிர்வினையாகக் காட்ட முயல்கிறது என்று கள ஆய்வு மேற்கொண்ட உண்மையறியும் குழுவினர் பலரும் கருதுகின்றனர்.
காவல் துறையின் வன்முறையை நியாயப்படுத்திய அதிமுக அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அறிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் காவல் துறை நடத்திய கொடியங்குளம் வன்முறைக்காக நியமிக்கப்பட்ட கோமதிநாயகம் கமிஷனும் திமுக ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி தாமிரபரணி படுகொலைகளுக்காக நியமிக்கப்பட்ட மோகன் கமிஷனும் அன்றைய ஆட்சியாளர்களின் எண்ணங்களையே பிரதிபலித்தன. அவை தலித் மக்களுக்கு நியாயம் செய்யவில்லை. எனவே பணியிலுள்ள நீதிபதி தலைமையிலான கமிஷன் அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை என்ற தலித் அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வர வேண்டும். தலித் கட்சிகளும் மக்களும்கூட இப்போராட்டத்தை அரசியல்ரீதியானதாகப் பரவலாக்க வேண்டும். அதோடு தலித் மக்கள் பிரச்சினையை ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினையாகக் கருதுவோரும் இதில் தலையிட வேண்டும்.
ooo
தங்களின் சுயமரியாதைக்காகப் போராடிய இமானுவேல் சேகரனை நினைவுகூர்வது ஒடுக்கப்பட்டோரைப் பொறுத்தவரை கடந்தகால வரலாறாக மட்டுமல்லாமல் நிகழ்காலத்தின் அரசியலாகவும் தொடர்கிறது. தமிழக அரசியல் அரங்குகளிலோ ஊடகங்களிலோ இமானுவேல் சேகரனும் அவரை அடையாளமாகக் கொண்டு வெளிப்படும் அரசியல் எழுச்சியும் சிறு அளவிலும் அங்கீகரிக்கப்பட்டதில்லை. பொதுவெளி மீதான தங்களின் உரிமைக்காக இம்மக்கள் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. பொதுச்சமூகத்தின் அங்கீகாரத்தைக் கோருவது என்பது தங்கள்மீது திணிக்கப்பட்ட இழிவை மறுக்கும் போராட்டம்தான்.
ராமநாதபுரம் பகுதியில் அரசியல் செல்வாக்கோடும் சாதி அதிகாரத்தோடும் இருந்த முத்துராமலிங்கத் தேவரை எதிர்த்ததால் கொல்லப்பட்டதாகத் தலித் மக்களின் நினைவுகளில் வாழும் இமானுவேல் சேகரனைக் கொண்டாடுவது சமகாலத்திலும் ஆதிக்கம் செலுத்திவரும் தேவர் சாதியினரின் அதிகாரத்தை எதிர்கொள்ளும் அரசியலாகவும் விளங்குகிறது. அதனால்தான் தேவர் சாதிக்கு இணையாகத் தங்கள் அடையாளங்களை அரசும் பொதுச்சமூகமும் அங்கீகரிக்க வேண்டும் என்று தலித்துகள் விரும்புகின்றனர். ஆனால் சமகால அரசியலும் பொதுச்சமூகமும் பிற சாதி அடையாளங்களை ஆராதிக்கும் அளவுக்குத் தலித் அடையாளங்களைக் கண்டுகொள்வது இல்லை. இப்புறக்கணிப்பிற்கு எதிரான தலித் மக்களின் கோபம் அதிகாரத்திற்கு எதிரான வன்முறையாகவும் மாறிவிடுகிறது. தங்கள் தலைவரின் நினைவுக்காக ஒன்றுகூடிய இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் காவல் துறைக்கு எதிராகக் கல்வீசிப் போராடியவர்களின் மனநிலை அதுதான். அரசே சாதியாகவும் சாதியே அரசாகவும் மாறிவிட்ட நிலையில் ஒடுக்கப்பட்டோரின் சிறு அடையாளத்தை அங்கீகரிப்பதும் ஆதிக்கச் சாதிகளைப் பகைப்பதாக மாறிவிடும் என்று இன்றைய அதிகார அமைப்பு கருதுகிறது. இமானுவேல் சேகரன் விழாவை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி தலித் அமைப்புகள் போராடுவதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது இதனால்தான். நினைவிடத்தில் பெரும் மக்கள் திரட்சி கூடுவதன் மூலம் அரசு விழா போன்ற அங்கீகாரங்களுக்கு அழுத்தம் கூடிவிடாதபடி துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் மூலம் அச்சூழலைக் கலைக்க விரும்புகின்றனர். சாதி முறைக்கு ஆதரவாக எடுக்கும் நடவடிக்கையை அரசு மறுக்கப்போவதில்லை என்பதை அறிந்திருப்பதால்தான் இம்மக்கள்மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தத் துணிந்திருக்கிறது. பொதுவாகவே அதிமுக ஆட்சியை முக்குலத்தோர் வகுப்பினருக்குப் பரிவான ஆட்சியெனச் சொல்வதுண்டு. பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்கள் இதைத் தங்களுடைய ஆட்சி அல்ல என்று கருதும்படியான நடைமுறைகளைத் தொடர்வது அதிமுகவிற்கோ அரசிற்கோ ஜனநாயகத்திற்கோ நல்லதல்ல.

சிறுதாவூரில், தலித் இடத்தை அபகரித்தவர் ஜெயலலிதா ?




""தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம் அமைந்துள்ள இடம், முறைப்படி வாங்கப்பட்டது. அந்த பத்திரத்தில், எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


இதுகுறித்து, கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: அண்ணா அறிவாலய நில விவகாரத்தில், ஜெயலலிதா எனக்கு சவால் விடுத்துள்ளார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அறிவாலய இடம் 25 கிரவுண்ட் தானா, அதற்கு மேல் இருந்தால், அதை அரசுக்கு ஒப்படைக்கத் தயாரா என, கூறியிருக்கிறார். அந்த பத்திரத்தில் காணி கணக்கில் எழுதப்பட்டுள்ளது. ஒரு காணி என்பது, ஒரு ஏக்கர் 33 சென்ட் என்பதை நான் கணக்கிட்டு, ஏறத்தாழ 25 கிரவுண்ட் என்று கூறினேன். முழு இடமும், 25 கிரவுண்ட் என நான் கூறவில்லை. சிறுதாவூரில், தலித் இடத்தை அபகரித்தவர் ஜெயலலிதா என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்; கொடநாடு எஸ்டேட்டில் மாளிகை கட்டி, மக்களுக்காக பாதை விட மறுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பின்னும், செயல்படுத்தாமல் இருப்பவர் என்பதை மறக்க முடியுமா?


அண்ணா அறிவாலய நிலம் எனக்காகவோ, குடும்பத்திற்காகவோ வாங்கப்பட்டதல்ல; தி.மு.க., அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டது. தி.மு.க., அறக்கட்டளையில் எம்.ஜி.ஆரும் ஒருவர். நிலத்தை மிரட்டி வாங்கியதை அவர் எதிர்த்ததால், 1972ல் அவரை கட்சியிலிருந்து நீக்கினர் என, ஜெயலலிதா கூறியுள்ளார். அண்ணா அறிவாலய நிலம் வாங்கிய அறக்கட்டளை பத்திரத்தில், எனது பெயர், நெடுஞ்செழியன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலத்தை மிரட்டியோ, வலியுறுத்தியோ வாங்கவில்லை என, சர்க்காரியா கமிஷன் தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் ஜெயலலிதாவிடம் கூறியதை தவறாக புரிந்து கொண்டு, அண்ணா அறிவாலயம் பற்றி குற்றஞ்சாட்டி, திருச்சியில் பேசிவிட்டு, அதற்கு ஆதாரப்பூர்வமாக நான் பத்திரத்தையே காட்டி, பதில் கூறியதும், மழுப்பலாக எதை எதையோ பதில் சொல்லி, ஜெயலலிதா தப்பிக்க பார்க்கிறார் என்பதைத் தான், அவருடைய பேச்சு சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது- திக்விஜய் சிங்


தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது- திக்விஜய் சிங்
காங்கிரஸ் பொதுசெயலாளர் திக்விஜய் சிங் கூறியதாவது:-பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையானவராக செயல்படுகிறார். எனவே அவரை மாற்ற வாய்ப் பில்லை. பிரதமர் பதவி காலியாகவும் இல்லை. நேரு, இந்திரா காலத்தில் இருந்து சோனியா காந்தி வரை தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. அவர்களுக்கு இட ஒதுக்கீடும் அளித்துள்ளோம். ஆனால் மாயாவதிதான் அவர்களைப் பற்றி பேசி ஓட்டு வாங்கும் அரசியல் நடத்துகிறார். ஆனால் ராகுல் காந்தி தலித் மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

650 கோடி ரூபாயில் பூங்கா திறந்து வைத்தார் மாயாவதி!


தன் கனவுத் திட்டமான, நொய்டாவில் 650 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பீம்ராவ் அம்பேத்கர் பூங்காவை, உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி நேற்று திறந்து வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையில், தலித் தலைவர்களை கவுரவிக்கும் வகையிலும், அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையிலும், பிரமாண்ட பூங்கா ஒன்றைக் கட்ட, முதல்வர் மாயாவதி திட்டமிட்டார்.
684 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு, கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மக்கள் பணத்தை மாயாவதி வீணடிப்பதாக, பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டின. இருந்தாலும், அதையெல்லாம் மீறி, மாயாவதி தன் கனவுத் திட்டத்தைத் தொடர்ந்தார். அந்தத் திட்டம், தற்போது நிறைவு பெற்று, பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
தன் கனவுத் திட்டமான, "பீம்ராம் அம்பேத்கர் பூங்காவை' திறக்க, லக்னோவிலிருந்து ஹெலிகாப்டரில் நொய்டா வந்த மாயாவதி, ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பூங்கா இருக்கும் இடத்திற்கு, ஏராளமான கார்கள் புடை சூழ பவனி வந்தார்.
பூங்காவிற்கு வந்த அவருக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், தலித் தலைவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பூங்காவைத் துவக்கி வைத்தார்.
அப்போது, அங்கிருந்த ஏராளமான புத்த மத குருக்கள், சிறப்பு வழிபாடு நடத்தினர். மொத்தம், 82 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய தலித் பிரர்னா ஸ்தல் மற்றும் கிரீன் கார்டனில், 24க்கும் மேற்பட்ட யானைச் சிலைகளும், டாக்டர் அம்பேத்கர், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் மற்றும் மாயாவதி உட்பட பலரின் உருவச்சிலைகளும் இடம் பெற்றுள்ளன.
பூங்காவை துவக்கி வைத்து, மாயாவதி பேசியதாவது: இந்த பூங்கா அமைப்பதற்கான, 684 கோடி ரூபாய் நன்கொடைகள் மூலம் பெறப்பட்டது. மாநில அரசின் நிதி ஒரு சதவீதம் மட்டுமே, இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் பூங்காவைப் பார்க்க வருபவர்களிடம் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணம் மூலம், விரைவில் பெறப்படும்.
தலித் தலைவர்களை கவுரவிக்கவே, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. டில்லியை ஆளும் காங்கிரஸ் கட்சியினர், நேரு, இந்திரா குடும்பத்திற்காக, யமுனை நதியின் ஒரு கரையில் நினைவகங்களைக் கட்டியுள்ளனர்.
தற்போது, அந்த நதியின் மற்றொரு கரையில், உ.பி.,யை ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, பிரமாண்டமான இந்தப் பூங்காவை அமைத்துள்ளது. உயரிய தலித் தலைவர்களை நினைவு கூர்வதற்காக, இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய பா.ஜ., அரசும், தற்போதைய காங்கிரஸ் அரசும், எனக்கு எதிராக சி.பி.ஐ.,யை பயன்படுத்தின. கடந்த சில ஆண்டுகளாக, உ.பி., மாநிலத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல, மத்திய அரசு நடத்தி வருகிறது.
இருந்தாலும், பல சாதனைகளை எனது அரசு படைத்துள்ளது. எனது இந்தக் கனவுத் திட்டத்தை சீர்குலைக்க, நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை எல்லாம் முறியடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மாயாவதி பேசினார்.
பூங்காவை, மாயாவதி திறந்து வைத்த போது, அதற்கு வெளியே ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நொய்டாவை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மத்திய துணை ராணுவப் படையினர் உட்பட, ஏராளமான போலீசாரும், விழா பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
* மாயாவதியின் கனவுத் திட்டமான, தலித் தலைவர்களுக்கு நினைவுப்பூங்கா கட்டும் பணி, 2008ம் ஆண்டில் துவங்கியது.
* பணிகள் ஆரம்பித்த பின், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.
* ஓக்லா பறவைகள் சரணாலயத்தின் அருகில், இந்த நினைவகப் பூங்கா கட்டப்பட்டதால், சிக்கல்கள் எழுந்தன. பூங்கா கட்டுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
* மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும், சுற்றுச் சூழல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிட்டது.
* இருந்தாலும், கடந்த ஆண்டு டிசம்பரில், மாயாவதியின் கனவுத் திட்ட பூங்காவிற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. பூங்கா அமைக்கப்பட்ட மொத்தமுள்ள 84 ஏக்கரில், 25 சதவீத இடங்கள் தவிர, மற்ற இடங்களில் மரங்கள் நட வேண்டும் என, உத்தரவிட்டது.
* மெகா நினைவகம் கட்டுவதன் மூலம், முதல்வர் மாயாவதி மக்கள் பணத்தை வீணடிக்கிறார் எனக் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகளும், தள்ளுபடி செய்யப்பட்டன. அவற்றில் சில வழக்குகள், இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.
* மாயாவதி, தன் குடும்ப உறுப்பினர்களின் சிலைகளை நிறுவவே, இந்தப் பூங்காவை அமைத்ததாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

தலித் மீது பரமக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்: புதிய தமிழகம்


திருச்சி : ""பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் தலித்கள் கொல்லப்பட்ட விவகாரம், மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். திருச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியல் வெளியீடு, உள்ளாட்சி அமைப்புகளின் எல்லை வரையறை ஆகியவை அறிவிக்கப்படும் முன், ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டாக இருந்த ஒன்பது கட்சிகளை கடைசி நிமிடம் வரை, கூட்டாளி என்று நினைக்க வைத்து அ.தி.மு.க., ஏமாற்றி விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களை பிடித்து விடலாம் என்ற அ.தி.மு.க., கனவு பலிக்காது. மாறாக மிகப்பெரிய தோல்வியே கிடைக்கும். புதிய தமிழகம் கட்சி, இந்த தேர்தலை சவாலாக எடுத்துக் கொண்டு கடுமையாக பணியாற்றி வருகிறது. போட்டியிடும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். கடந்த செப்., 11ம் தேதி பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது தலித்கள் இறந்தனர்.
இதற்கு குறைந்தபட்ச மனிதாபிமான விஷயமான ஆறுதல் கூட, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கவில்லை. இதை ஜாதிக் கலவரமாக சித்தரிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் தலித்கள் கொல்லப்பட்ட விஷயம், திருச்சி மேற்கு தொகுதியில் நிச்சயம் எதிரொலிக்கும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு புதிய தமிழகம் நிச்சயம் ஆதரவு தரவில்லை. நேர்மையான சுயேச்சைகளுக்கு ஆதரவு தருவோம். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
திருச்சி ஜங்ஷன் அருகே செந்தூர் ஓட்டலில், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியை, தி.மு.க., எம்.பி., விஜயனும், மாநகர இளைஞரணி அமைப்பாளர் தங்கமணியும் நேரில் சந்தித்து, திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆதரவு தர கோரிக்கை விடுத்தனர்.

தலித் தலைவர்கள் சிலையுடன் மாயாவதி தனக்கு தானே சிலை வைத்து மாலை அணிவிப்பதா? திக்விஜய்சிங் கண்டனம்


 நொய்டா, அக் 15-
 
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 84 ஏக்கர் பரப்பளவில் ரூ.685 கோடி செலவில் பிரமாண்டமான வகையில் தலித் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. அதில் தலித் தலைவர்கள் அம்பேத்கார், கன்சிராம் சிலைகளுடன் மாயாவதிக்கும் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சின்னத்தை குறிக்கும் வகையில் 20 யானைகள் சிலையும் பூங்காவில் வைக்கப்பட்டது.
 
இந்த நினைவகம் மற்றும் பூங்காவை முதல்- மந்திரி மாயாவதி திறந்து வைத்தார். சிலை மற்றும் பூங்கா அமைப்பதற்கு ரூ.685 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையெல்லாம் மாயாவதி பொருட்படுத்தாமல் நினைவகத்தை திறந்து வைத்தார்.
 
விழாவில் பேசிய மாயாவதி தலித் இனத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி பிரதமராக நியமிக்க வேண்டும். சபாநாயகர் மீராகுமார், மத்திய மந்திரி சுஷில்குமார் ஹிண்டே ஆகியோரில் ஒருவரை பிரதமராக்கலாம் என்று யோசனை கூறினார். அவரது கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்தது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது:-
 
பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையான பண்புள்ளவராக செயல்படுகிறார். எனவே இந்த நேரத்தில் அவரை மாற்ற வாய்ப்பில்லை. பிரதமர் பதவி காலியாக இல்லை. தலித்தலைவர்களை புறக்கணிப்பதாகவும், அவர்களுக்கு சிலை வைப்பதை எதிர்ப்பதாகவும் காங்கிரஸ் மீது மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இது தவறு. பிரதமர் மன்மோகன்சிங் தலித் இனத்தவர்களுக்காக பாடுபட்டு வருகிறார். நினைவகங்களில் தலித் தலைவர்களது சிலை வைக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
 
ஆனால் தலித்தலைவர்களுடன் மாயாவதி தனக்குத் தானே சிலை வைப்பதும், அவரது சிலைக்கு அவரே மாலை அணிவிப்பதும்தான் சரியில்லை. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதை மாயாவதி புரிந்து கொள்ளவேண்டும். நேரு, இந்திரா காலத்தில் இருந்து சோனியா காந்தி வரை தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. அவர்களுக்கு இட ஒதுக்கீடும் அளித்துள்ளோம். ஆனால் மாயாவதிதான் அவர்களைப் பற்றி பேசி ஓட்டு வாங்கும் அரசியல் நடத்துகிறார்.
 
ஆனால் ராகுல் காந்தி தலித் மக்களின் ஆதரவை பெற்று வருகிறார். வானவில் போல உயர் பிரிவினரையும், தலித் மற்றும் முஸ்லிம்களையும் சமமாக மதிக்கிறோம்.
 
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது: பொதுசெயலாளர் திக்விஜய் சிங்

காங்கிரஸ் பொதுசெயலாளர் திக்விஜய் சிங் கூறியதாவது:- பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையானவராக செயல்படுகிறார். எனவே அவரை மாற்ற வாய்ப் பில்லை. பிரதமர் பதவி காலியாகவும் இல்லை. நேரு, இந்திரா காலத்தில் இருந்து சோனியா காந்தி வரை தலித் இனத்தவர்களுக்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. அவர்களுக்கு இட ஒதுக்கீடும் அளித்துள்ளோம். ஆனால் மாயாவதிதான் அவர்களைப் பற்றி பேசி ஓட்டு வாங்கும் அரசியல் நடத்துகிறார். ஆனால் ராகுல் காந்தி தலித் மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

வி.ஏ.ஓ. தேர்வில் முறைகேடு புகார்: தலித் கட்சித் தலைவர் சிக்குகிறார்?



சென்னை, அக்.15-2011 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் தலித் கட்சித் தலைவர் ஒருவர் 600 பேருக்கு பரிந்துரை செய்திருக்கிறார்; வெள்ளிக்கிழமை நடந்த சோதனையில் இது தெரிய வந்திருப்பதால் அவரது தலையீடு குறித்துப் போலீஸôர் விசாரிக்க உள்ளனர்.  கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற உதவி பல் மருத்துவர் பணி,மோட்டார் வாகன ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், குரூப் 1 தேர்வு ஆகிய பணியிடங்களுக்குத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரின்பேரில் சென்னை லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தேர்வாணையத் தலைவர் ஆர். செல்லமுத்து, ஆணைய உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவரது வீடுகளில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.  இந்தச் சோதனையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரே அதிர்ச்சியடையும் அளவுக்கு பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 
தேர்வு அறை நுழைவுச் சீட்டு ஜெராக்ஸ், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோரின் இறுதிப் பட்டியல், வீட்டுமனை வரைபடங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.  இது தவிர இரு தேர்வாணைய உறுப்பினர்களின் வீடுகளில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாம். தேர்வாணைய உறுப்பினர் ஒருவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ.26.3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாம். மொத்தம் ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சிக்குகிறார் தலித் அமைப்பு நிர்வாகி: அதேவேளையில் அண்மையில் வெளியிடப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தலித்துகளுக்கான 600 இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பதும், ஒரு தலித் அமைப்பு நிர்வாகி தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாம். ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்துக்கு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை லஞ்சமாகப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரிடம் விரைவில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.  9 மணி நேர விசாரணை: செல்லமுத்துவிடம் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடங்கிய விசாரணை அதிகாலை 4 மணி வரை சுமார் 9 மணி நேரம் நடைபெற்றது. தேர்வாணைய உறுப்பினர்களிடம் இரவு 10 மணிக்கு விசாரணை முடிவடைந்திருக்கிறது. அவர்கள் அங்கிருந்து வெளியேற உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.  ஆனால் தொழில்நுட்பப் பணியாளர்களிடம் போலீஸôர் தீவிர விசாரணை செய்தனராம்.  இவர்களுக்குத் தெரியாமல் தேர்வு முடிவில் எந்த மாற்றத்தையும் அதிகாரிகள் செய்ய வாய்ப்பில்லை என்பதால் அவர்களிடம் இவ்வாறு விசாரணை செய்யப்பட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  கிடைத்த ஆவணங்கள் அடிப்படையிலும், விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும் மேலும் சிலர் மீது வழக்குகள் தொடர்ந்திட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமணி

மன்மோகன் சிங்குக்கு பதிலாக தலித் பிரதமரை நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை





லக்னோ: ‘‘மன்மோகன் சிங்குக்கு பதிலாக தலித் இனத்தை சேர்ந்தவரை பிரதமராக்கும் திட்டம் எதுவுமில்லை’’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறினார்.
இது தொடர்பாக லக்னோவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஊழலை ஒழிப்பதில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், உத்தர பிரதேசத்தில் மாயாவதி அரசில் நடக்கும் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அவர் அப்படி செய்தால், காங்கிரசும் அதில் பங்கேற்கும். உண்ணாவிரதத்தில் நான் கூட கலந்து கொள்வேன். பலமான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரை காத்திருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த மசோதாவில் சேர்க்கும்படி அன்னா குழு தெரிவித்த 3 முக்கிய அம்சங்களை மத்திய அரசு ஏற்றுள்ளது. எனவே, நாடாளுமன்றத்துக்கு மதிப்பளித்து, அதன் முடிவுக்காக அன்னா பொறுத்திருக்க வேண்டும்.
மன்மோகன் சிங்குக்கு பதிலாக தலித் இனத்தை சேர்ந்தவரை பிரதமராக்கும் திட்டம் எதுவும் இல்லை. தனது ஊழல் ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பவே, தலித் பிரதமர் நியமிக்கப்படுவதாக முதல்வர் மாயாவதி தவறான தகவலை பரப்பி வருகிறார். 
இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

அருந்ததியர் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்!

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் சைதை ரவி இன்று திரு.வி.க. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 7 வார்டுகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அவருடன் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் ஆர்.மனோ உடன் சென்றார்.
அப்போது சைதை ரவி பேசியதாவது:

சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது இருந்த 155 வார்டுகள், 200 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. சென்னை மேயராக என்னை தேர்ந்தெடுத்தால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குறுகிய சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும்.

திரு.வி.க. நகர் பகுதியில் அதிகளவில் தாழ்த்தப்பட்ட மற்றும் அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை தரம் உயரவும், அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கவும் காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் அளிக்கும். மழை காலம் துவங்க உள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

பழுதடைந்த சாலைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு வடசென்னை பகுதியில் வரும் மழை காலங்களில் வெள்ளநீர் தேங்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு சைதை ரவி பேசினார். இன்று மாலை ஆலந்தூர், சோழிங்கநல்லுர், மடிப்பாக்கம் பகுதியில் சைதை ரவி பிரசாரம் செய்கிறார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் வாக்கு சேகரிக்கிறார்.

தலித் தலைவர் இம்மானுவேல் பிறந்த தினம்-நினைவிடத்தில் 5000 பேர் அஞ்சலி



 

அக்.10-
தலித் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் 5000க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம், செப்டம்பர்11ம் தேதி நடந்தது. அப்போது பெரும் கலவரம் மூண்டது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில், நேற்று இம்மானுவேல் சேகரனின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்றைய தினத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

கலவரத்தில் பலியானர்வகளின் குடும்பங்களை சேர்ந்தவர்களும், கிராமமக்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். அமைதி ஊர்வலம் 5 முனைபகுதியில் இருந்து தொடங்கி இமானுவேல் சேகரன் நினைவிடத்தை அடைந்தது.

நினைவிடத்தில் 5000க்கும் மேற்பட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.